புளியமரங்களின் வரலாறு குறித்து - ஜோசப் மரியமைக்கேல்


புளியமரங்கள் மனித குலத்திற்கு
பெரிதும் பயன்படுகின்றன
என்பதை அறிவேன்.
அவைகள் இன்றும்
இப்புவியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
அவைகளை கடவுள்
படைத்த காலம் தொட்டே
இங்கு இருக்கின்றன.

உலகெங்கிலும் இருப்பினும்
இந்தியாவிலும், தழிழகத்திலும்
அவைகள் இருக்கின்றன
அவைகள் சந்தித்த புயல்கள்
ஆயிரக்கணக்கானவையாக இருக்கலாம்.

கொள்ளை நோய்கள் ஒரு
கோடி இருக்கலாம்.
விலங்குகளின் கொடுமைகளை 
மீறியும் இப்புவியில் தங்கள்
வம்சத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன.

நால் வழி சாலைகள்
அழித்தவை ஆயிரமாயிரங்கள்
என்ற போதிலும்
அவைகளின் வம்சத்தை 
அடியோடு அழியாவண்ணம்
பாதுகாத்து கொண்டன.

உலகின் முடிவு பரியந்தம்
அவைகள்
தங்களைப் பாதுகத்துக் கொள்ளுமா?
என்பது நான் அறியாதது.

Comments

Popular posts from this blog

துப்பறியும் நாவல்களின் காலம் முடிந்துவிட்டதா? அல்லது சுஜாதாவிற்குப் பின் துப்பறியும் நாவல்கள்? ம.ஜோசப்

பாவம் இல்லாதவர் இவள் மேல் கல் எறியட்டும் - ஜோசப் மரியமைக்கேல்.

யூதாஸ் இஸ்காரியோத்தின் நற்செய்தி - ம. ஜோசப்