மலர்கள் கீழே விழுந்ததை எப்போது அறிந்திருப்பாள்?

பேருந்தில் பணிக்கும் போது
யாரோ ஒரு பெண்
தவற விட்டிருந்த
ரோஜா, மல்லிகைச் சரம் மற்றும்
கூந்தலூசி (hair pin)
காலடியில் பட்டது.

தனக்கு அழகைக் கொடுக்கும்,
வாசத்தைக் கொடுக்கும், என
அவள் நம்பிய, மலர்கள்
கீழே விழுந்ததை எப்போது அறிந்திருப்பாள்?

தனது காதலனுக்காக அவள்
அதனைச் சூடியிருக்கலாம்.
அப்பூக்கள் குறித்தும்,
அவை பிரத்யேகமாய் அவளுக்குத் தரும்
அழகு குறித்தும்
அவன் பேசுவதை கேட்கவிருந்த
அவளின் ஆசை வாடிப் போய்க் கிடந்தது.

கணவனுக்காக அதனைச் சூடியவளாகக் கூட இருக்கலாம்.

அவள், அவளுக்காகவேக் கூட,
ஒரு வேளை, சூடியிருக்கக் கூடும்.

எப்படி, அதனைத் தவற விட்டிருக்கமுடியும்?
தீவிரமாக, ஏதேனும், அவள் சிந்தனையை
ஆக்கிரமித்திருக்கலாம்.

அப்பூக்களை தூக்கியெறிய மனமின்றி
முகந் தெரியாத, அப்பெண்னைக் குறித்து
ஏன் அதிகம் யோசிக்கின்றேன்?


ம.ஜோசப் 

Comments

Popular posts from this blog

துப்பறியும் நாவல்களின் காலம் முடிந்துவிட்டதா? அல்லது சுஜாதாவிற்குப் பின் துப்பறியும் நாவல்கள்? ம.ஜோசப்

பாவம் இல்லாதவர் இவள் மேல் கல் எறியட்டும் - ஜோசப் மரியமைக்கேல்.

யூதாஸ் இஸ்காரியோத்தின் நற்செய்தி - ம. ஜோசப்