Skip to main content

பேரழிவுகளின் ஆரம்பம்


காலம் என இல்லாத ஒன்றை
கிழமைகள் என்றும், மாதங்கள் என்றும்
வருடங்கள் என்றும்
கற்பித்துக் கொண்டோம்.

ஒரு மாபெரும் சமுத்திரத்தை,
பல பெயரிட்டு, பல கடல்களாக்கி
எல்லைகளையும் வகுத்துக் கொண்டோம்.

மாபெரும் நிலப் பரப்பை
சில எல்லைகளை கற்பித்துக் கொண்டு,
சண்டைகளையும், போர்களையும்
உருவாக்கினோம்.

இல்லாத மதத்தையும், சாதியையும்
கற்பித்துக் கொண்டு
பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் கொன்றோம்,
உடமைகளை அழித்தோம்,
ஆயிரக்கணக்கான பெண்களை கற்பழித்தோம்.
சில காதல்களையும், நாம் விட்டுவிடவில்லை.

இந்த கற்பிதங்கள் யாவும்
இதுவரை,
இப்பூமி அறியாதது.

அது இவைகளை அறிந்து
கொண்ட போது
பேரழிவுகளை உருவாக்க ஆரம்பித்துள்ளது.

ம.ஜோசப் 

Comments

Popular posts from this blog

துப்பறியும் நாவல்களின் காலம் முடிந்துவிட்டதா? அல்லது சுஜாதாவிற்குப் பின் துப்பறியும் நாவல்கள்? ம.ஜோசப்

பாவம் இல்லாதவர் இவள் மேல் கல் எறியட்டும் - ஜோசப் மரியமைக்கேல்.

யூதாஸ் இஸ்காரியோத்தின் நற்செய்தி - ம. ஜோசப்