Posts

Showing posts from September, 2013

Who murdered the Wife?

“அவர் கால் தூசிக்கு நீ சமமாக மாட்டாய்” ம.ஜோசப் கொடைக்கானலில் அந்தக் கொலை நடந்துள்ளது. குடும்பத்துடன் சுற்றுலா வந்தவர்களில் அந்தப் பெண் மட்டும் கொலை செய்யப்பட்டுள்ளாள். அவள் இரு குழந்தைகளுக்குத் தாய். சொந்த ஊர் மதுரை. அவள் கணவன் ஒரு தனியார் நிறுவனத்தில் எழுத்தராகப் பணி செய்கிறார். கொடைக்கானல் காவல் நிலையத்திலிருந்து எஸ்.ஐ.யும் இரு காவலர்களும் அங்கு விரைந்தனர். இரு குழந்தைகளும், அவள் கணவனும் கவலையுடனும், பதட்டத்துடனும் நின்றிருந்தனர். அங்கு ஒரு சிறு கூட்டம் கூடியிருந்தது. எஸ்.ஐ., பாடி எங்கே? என்றார். ஒதுக்குப்புறமான ஒரு இடத்தைக் அந்தக் கணவன் காட்டினார். அங்கே சென்ற அவர், அதிர்ந்தவராய், அந்தப் பெண்ணின் உடலைப் பார்த்தார். குப்புற படுத்திருந்தாள். தலையின் பின் புறத்தில் ரத்தம் நிறைய வழிந்தோடி கழுத்திலும், தரையிலும் பரவியிருந்தது. அளவுக்கு அதிகமான ரத்தம் வெளியேயிருந்தது. அருகில் ஒரு பெரிய கல் கிடந்தது. அதிலும் ரத்தம் பரவியிருந்தது. பின்புறமாய் யாரோ கல்லால் தாக்கியிருக்க வேண்டும். அதில் நிலை தடுமாறி கீழே விழுந்து, உயிர் போயிருக்கக் கூடும். சலேத்து மாதா கோவிலின் சற்று ஒதுக்குப்பு...

Novel - Chapter 4

பாம்புகள் வந்து கொண்டேயிருக்கின்றன 4 அலமேலு தனித்திருந்தாள். மருத்துக் கல்லூரிப் பகுதியில் உள்ள அவர்கள் வீட்டில் தனியே இருந்தாள். அவளின் பயங்களை யாரும் அறியா வண்ணம் பூட்டிக் கொண்டாள். காலம் அவள் மேல் பெரும் இருட்டைப் போர்த்த ஆரம்பித்து விட்டது போல் உணர்ந்தாள். மனதில் அடியாழத்தில் பூனை பிராண்டுவதைப் போல் சத்தம் கேட்டது. அடிக்கடி, தனியே இருக்கும் போது இது மாதிரியான சப்தங்கள் கேட்கின்றன. அவள் குழந்தைகளுடன் சிரித்தாள்; அவர்களின் விளையாட்டுக்களை விளையாடினாள்; அவர்களின் தொலைக் காட்சிகளைப் பார்த்தாள்; சில நேரங்களில் குடும்பக் கவலைகளில் மூழ்கிப் போனாள். இருந்தும் பிராண்டல்களில் மெல்லிய அதிர்வுகள், அவளின் கால்களைப் பற்ற ஆரம்பித்தன. அவளின் இதயத்தைப் பற்றிக் கொண்ட, அந்தக் கொடியவனை விரட்ட, அவளின் கணவனும் அங்கிருக்கவில்லை. தனிமையாய் இருக்கும் போது பூனை புலியாகும் சாத்தியங்கள் அதிகரித்தன. சுப்ரணியன் வீட்டிற்கு வந்தான். வீடு திறந்து கிடந்தது. அம்மா உள்ளே படுத்திருந்தாள். மனைவியைக் காணவில்லை. வெளிச்சமில்லாமல் மெல்லிய இருள் அறைகளில் பரவியிருந்தது. அவன் கலவரமடைந்தான். மங்கை, மங்கை என க...

Novel - Chapter 3

பாம்புகள் வந்து கொண்டேயிருக்கின்றன 3 அவர்களது சொந்த ஊரில், சொக்கலிங்கத்தின் இறுதிக் காரியங்களைச் செய்து முடித்தனர். அகில் மொட்டையடித்திருந்தான். ஊரே அழுது, அவரை வழியனுப்பி வைத்தது. சொந்தக் காரர்கள் வந்தும், போய்க் கொண்டும் இருந்தர். சுப்ரமணியனின் தங்கை அருணா அழுது, அழுது ஓய்ந்து படுத்து விட்டாள். அவளது கைக் குழந்தை அடிக்கடி அழுது கொண்டிருந்தது.  மரணத்தின் ரோஜா வாசம் இன்னும் வீடெங்கும் பரவியிருந்தது. ஒரு சிலர், அப்பா இல்லாமல், ஊர், ஊராக இல்லை, என ஆதங்கப்பட்டனர். அவர் காலத்தில் இருந்த ஊர் இப்போது இல்லை, எனக் குறைப் பட்டனர். குடும்பத்தினர் ஒவ்வொரும், அவரைப் பற்றிப் பேசிப் பேசி ஆற்றினர். சிலர் குற்ற உணர்ச்சியால் தவித்தனர். அவர்களுள், அவர் மனைவி அலமேலுவும் ஒ ருவர். அவளுக்கு எதிர்காலம், தனது கடைசி காலம் குறித்து மிகுந்த சஞ்சலம் உண்டாயிருந்தது. நிறையக் கேள்விகள்? குழப்பமான பதில்கள், தனது புதல்வர்கள், அவர்களின் மனைவிகள், அவர்கள் எவ்வாறு நம்மை பாதுகாப்பார்கள்? நாம் இவர்களுக்காக இனி நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்? நமது இருப்பும், முக்கியத்துவமும் இனி இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல, ...