Posts

Showing posts from July, 2014

A.R.Murga Doss - Ezhaam Arivu - An analysis.

Image
இந்தியாவின் ( வியாபர ரீதியில் பெரு ) வெற்றி பட இயக்குனர் ஏ.ஆர். முருக தாஸ். தீனா, ரமணா, கஜினி ஆகிய தமிழ் படங்களையும், ஸ்டாலின் என்ற தெலுங்கு படத்தையும், கஜினி என்ற இந்தி படத்தையும் இயக்கியுள்ளவர் ஏ.ஆர். முருக தாஸ். அவர் கதை சொல்லும்பாணி, அவருக்கேயான தனித்தன்மை வாய்ந்தது. அவரது காமிரா மொழி அதியசிக்கச் செய்வது, அதிர்ச்சிக்குள்ளாக்குவது, பயமுறுத்துவது, பிரமிப்பூட்டுவது.. ரமணா படத்தில் புகழ் பெற்ற சிறைக் காட்சியில் பெற்றோர்கள் ஒடிவரும் காட்சி ஒரு சிறந்த உதாரணமாகும். இது போல் பல சிறப்பான காட்சிகளைக் கொண்டது அப்படம். பெரும்பாலும் திரில்லர் ( thriller ) வகைப் படங்களை ஒத்தது அவரது படங்கள். அவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்துள்ள ஏழாம் அறிவு ( அக்டோபர் 2011 ) திரைப்படம் பற்றி இக்கட்டுரை விமர்சிக்கிறது.        ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்த பல்லவ இளவரசரான போதி தர்மரின், மருத்துவ அறிவையும், தற்காப்பு கலை நுட்பங்களையும், தற்போதைய, அவரின் வம்சத்தைச் சார்ந்த நிகழ் கால மனிதனுக்கு, அதி நவீன மரபணு பொறியியல் ஆராய்ச்சி மூலம், நினைவுக்கு கொண்டு வந்து, நிகழ் கால ஆபத்திற்...

Pasanga and Marina - Cinemas of Pandi Raj - An analysis

Image
பசங்க மற்றும் வம்சம் படங்களின் இயக்குனர் பாண்டிராஜின் மூன்றாவது படம் மெரினா (பிப்ரவரி 2012). மெரினா கடற்கரை, அனாதைச் சிறுவர்கள், சில விளையாட்டுகள், பெரியவர்கள், அவர்களுக்கிடையேயான உறவு சிக்கல்கள்; இடையே ஒரு காதல்; இவற்றினூடாக பின்னப்பட்ட பல்வேறு நிகழ்வுகளின் யதார்த்தமான ஒரு சித்தரிப்பே மெரினா வாகும். நெய்தல் நில மக்களுக்கு கடல் ஒரு தெய்வம்; அவர்களின் ஆதித் தாய்; கடற்கரை வாழ்விடம். குடும்பற்றவர்கள், குடும்பத்தால் துரத்தப்பட்டவர்கள், கைவிடப்பட்டோர், அனாதைச் சிறுவர்கள், சிறுமிகள், ஏழைகள், ஆகியோருக்குப் புகலிடமாக விளங்குவதும் கடற்கரை. குறிப்பாக மெரினா கடற்கரை. மெரினா படமும் இதை அழகாகப் பதிவு செய்கிறது. கைவிடப்பட்ட ஒரு முதியவரின் பாத்திரம் ஒரு சிறப்பான பாத்திர படைப்பு. அவர்தான் படத்தின் இறுதிகாட்சிகளுக்கு உயிரூட்டுகிறார். அவரது கண்ணீர், நம் கண்களை குளமாக்குகிறது. அவரது மரணம் குறித்த காட்சிகள் படத்தின் அதி அற்புதமான காட்சிகள் எனலாம். அதே போல், படத்தில் வரும் தபால் காரரின் பாத்திரம். அது ஒரு மீட்பரைப் போன்றது. இது ஒரு பழைய கதையை நினைவூட்டுகிறது. கிறிஸ்துமஸ் பரிசு வராதா?  என ஏங்க...