Posts

Showing posts from June, 2014

இயக்குனர் வசந்த பாலனின் சினிமா - ஆய்வு.

Image
ஆல்பம், வெயில் மற்றும் அங்காடித் தெரு படங்களின் இயக்குனர் வசந்த பாலனின் நான்காவது படம் அரவாண் (மார்ச்-2012). தமிழுக்கு புதிய கதைகளம். யாரும் சித்தரிக்காத கிராமத்து வாழ்வு. புதுமையான கேமிரா கோணங்கள். இப்படி இப்படத்தின் பல சிறப்புகளைக் கூறிக் கொண்டே போகலாம். அவரது மற்ற எல்லாப் படங்களையும்விட மிக சிறப்பான தொழில் நுட்ப நேர்த்தியுடன் அமைந்துள்ளது, இப்படம் என்றால், அது மிகையில்லை.                                                               களவையே தொழிலாகக் கொண்ட கள்ளர் நாட்டின்  ஒரு ஊரில் (வேம்பூர்) வசிக்கும் பசுபதி (கொம்பூதி) கொத்து என அழைக்கப்படும் குழுவினருடன் களவுக்குச் செல்பவர். களவு பற்றிய அனைத்து நுட்பங்களும் தலைமுறை தலைமுறையாக அவர்களுக்கு சொல்லித் தரப்படுகிறது. களவிலும் சில விதி முறைகள், தொழில் தர்மங்கள் உள்ளன. கருப்பன் அவர்கள் தெயவம். மாத்தூர் என்ற கிராமத்திற்கும், சின்ன வீரம்பட்டி ...

Cinemas of Sarkunam - An Analysis

Image
சற்குணத்தின் வாகை சூட வா (அக்டோபர் 2011) படம் தமிழில் ஒரு முக்கியமான திரைப்படம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. தமிழுக்கு புதிய கதைகளம். யாரும் சித்தரிக்காத கிராமத்து வாழ்வு. புதுமையான கேமிரா கோணங்கள். யதார்த்தமான கதை சொல்லல், யதார்த்தமான கிராமத்து மக்கள், இப்படி இப்படத்தின் பல சிறப்புகளைக் கூறிக் கொண்டே போகலாம். இப்படத்தை எடுத்தற்காகவே இயக்குனர் சற்குணத்தைப் பாராட்டலாம். இது குறித்த விமரிசனங்களை இனி காணலாம். ஒரு கிராமத்தில் செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக வாழும் மக்களின் குழந்தைகளுக்கு, கல்வி கற்றுக் கொடுக்கச் செல்லும் ஆசிரியர், சூளை முதலாளிகளின் பலத்த எதிர்ப்பையும் மீறி, கல்வி கற்றுக் கொடுப்பதுதான் படத்தின் கரு. 1966-ல் கதை நடப்பதாக கூறப்படுகிறது. கிராமம் கண்டெடுத்தான் காடு. கண்டெடுத்தான் காடு கிராம மக்கள் வெள்ளந்தியாக காட்டப்படுகின்றனர். அவர்கள் கற்றுக் கொடுக்க வந்த ஆசிரியரை கிண்டலும், கேலியும் செய்துகொண்டிருக்கின்றனர். போதாதற்கு ஒருவர் ஆட்டு கிடாயை வைத்து முட்டவைத்து விரட்டப் பார்க்கின்றார். அவர்களின் குழந்தைகள் கற்று கொடுக்க வரும் ஆசிரியரிடம் கிண்டல் செய்தும், நையா...