சில காதல் கவிதைகள் - ஜோசப் மரியமைக்கேல்
அவளின் காதல்
குறித்து.
-------------------------------
பூங்காவில் அவளின் 
காதலன் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தாள். 
அவளைச் சுற்றி வரும் ஆண்களை நோட்டமிட்டபடியே.
                                ****
என் காதல் குறித்து.
------------------------------
காலம் கடந்து முளைத்திருந்தது விடிவெள்ளி.
அதற்குள்,
நன்கு விடிந்துவிட்டது.
                            ****
காதலர் தினத்தில்
-------------------------
உன்னை மட்டுமே, உயிருக்குயிராய் காதலிப்பதாக,
ஒரு மலர் மற்றும் இதயம் வரையப்பட்ட, 
காதல் ததும்பும் அந்த வாழ்த்து அட்டையை,
அவனிடம் மிகுந்த அன்போடு கொடுத்தாள்.
அதே போன்ற இன்னும் பல அட்டைகளை
தனது கைப்பையில் அவள் வைத்திருப்பது,
அவனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.
                            *****
காதலிப்போரும், திருமணமானோரும்.
----------------------------------------------------------------
ஒரு பிரச்சினை எனில்,
காதலிப்போர்
காதலியிடம் மட்டுமே சண்டையிட நேரும். 
திருமணமானோருக்கோ,
மனைவியுடன் மட்டுமல்ல,
அவள் குடும்பத்துடனும்,
சண்டையிட வேண்டியிருக்கும்,
பாக்கியம் உள்ள சிலருக்கு,
அவளின் முன்னாள் காதலனுடனும். 
                                        ****
 
Comments